Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விராட் கோலிக்கு ‘ஆண்டின் சிறந்த நடுவர் விருது’ - பாபர் அசாம் ரசிகர்கள் கடும் கேலி!

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து 2-வது முறையாக ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர். ஆனால், அதற்காக இந்திய லெஜண்ட் விராட் கோலியை கேலி செய்யலாமா? ஆனால், அப்படிச் செய்வதில்தான் அவர்களின் கொடூர மகிழ்ச்சி இருக்கிறது என்பதை இந்தச் செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

பாபர் அசாம், 2022-ம் ஆண்டில் 9 ஒருநாள் போட்டிகளில் 679 ரன்களை 84.87 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். தனிப்பட்ட சாதனையுடன் கேப்டனாகவும் அவர் கடந்த ஆண்டில் பிரமாதமாகச் செயல்பட்டிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உதை மேல் உதை வாங்கினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் மட்டுமே தோற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்