Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெஸ்ட் போட்டி எதிர்காலம்: வார்னர் கவலை

மெல்பர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து நான் கவலை கொண்டுள்ளேன் என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட டேவிட் வார்னர் பேசியதாவது: அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் என்ன நடக்கும். கிரிக்கெட் எந்த திசையில் செல்லும் என்பதை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் கவலை ஏற்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்
டில் விளையாட ஆர்வமாக இருக்கும் வீரர்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். அந்தப் பெருமிதம்தான் உங்கள் வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அற்புதமான விஷயமாகும். டெஸ்ட் போட்டிகள் உங்கள் கிரிக்கெட் திறமையை நன்குப் பரிசோதிக்கக் கூடியதாக இருக்கும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்