சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று ஆடவருக்கான யு-19 அணிகள் பிரிவு கால் இறுதி சுற்றில் தமிழகம் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழகம் 1-3 என்ற கணக்கில் உத்தரபிரதேசத்திடம் தோல்வி அடைந்து பதக்க வேட்டையில் இருந்து வெளியேறியது.
0 கருத்துகள்