மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் கங்குலி - கோலி மோதல், இந்திய அணி தேர்வு, வீரர்களின் உடல் தகுதிக்கு ஊக்க மருந்து எடுத்தது குறித்து பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி - கோலி இடையே மோதல்கள் இருந்து வந்ததாக ஊடகங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியாகின. அதனை உறுதி செய்யும் வகையில் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
0 கருத்துகள்