Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெஸ்ட் கேப்டன்சி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் பெரிய சவால்!

இங்கிலாந்தில் மீதமிருந்த 5-வது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகினார். அதன்பிறகு இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிய சவால் அவரது கேப்டன்சிக்கு காத்திருக்கிறது. வரும் 9-ம் தேதி நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய ஆக்ரோஷத்திற்கு சரிசமமாக நிற்க இங்கு ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இல்லை. விராட் கோலியும் கேப்டனாக இல்லை. இந்த ஆஸ்திரேலிய அணி வித்தியாசமானது. பழைய ஆஸ்திரேலியா போல் வெறிநாய் தனமாக எதிரணியினர் மீது வார்த்தை வசைகளால் தாக்கி மன ஓர்மையைக் குலைக்கும் (Mental Disintegration) ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்திரேலியா அணி அல்ல. பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வார்னர், ஸ்மித் தடை செய்யப்பட்ட பிறகே அந்த அணியின் நடத்தை பெரிய அளவில் மாறியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்