மும்பை: தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொண்ட ரகசிய புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா. இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
விராட் கோலி, கங்குலி இடையே ஈகோ பிரச்னைகள் இருந்தன. கிரிக்கெட் வாரியத்தை விடவும் தன்னை மிகப்பெரிய ஆளாக கோலி நினைத்துக் கொண்டார். யாரும் அவரைத் தொட முடியாது எனற எண்ணமும் அவருக்குஇருந்தது. தான் இல்லாவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட்டே இருக்காது என்றும் அவர் நினைத்தார்.
0 கருத்துகள்