நாக்பூர்: அஸ்வினின் அபார பந்துவீச்சின் துணையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. இதன்மூலம் 223 ரன்கள் இந்தியா முன்னிலையில் இருந்தது.
0 கருத்துகள்