Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘பிட்ச் தயாரிப்பில் சுதந்திரம்’ - இயன் சேப்பல் Vs ரவி சாஸ்திரி

மும்பை: உலகம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களை தயாரிக்கும் பிட்ச் தயாரிப்பாளர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, எதிர்வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமையும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி வியாழன் அன்று துவங்குகிறது. இந்தத் தொடரை தயாராகும் வகையிலான பயிற்சி ஆட்டத்தில் கூட விளையாட மறுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்தச் சூழலில் இயன் சேப்பல் இதனை தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்