மும்பை: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம். 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
வரும் மார்ச் 4 முதல் 26 வரையில் முதல் சீசனின் போட்டிகள் நடைபெற உள்ளன. மகளிர் கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது என முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்