Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலாவது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்