Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் சீசனுக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் விளையாடுவது சவாலானது: ராகுல் திராவிட்

அகமதாபாத்: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் 7 முதல் 11-ம் தேதி வரையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது. ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப் போட்டி மே 28-ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டுக்கும் இடையிலான இடைவெளி வெறும் 9 நாட்கள் மட்டுமே. அந்த இடைப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையில், ராகுல் திராவிட இது குறித்து பேசியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்