Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மோசமான பார்மில் இருந்து விராட் கோலி மீண்டு வருவார் - ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இதுவரை 111 ரன்களே சேர்த்துள்ளார். மேலும் கடைசியாக விளையாடிய 14 இன்னிங்ஸில் அவர், ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலியின் பார்ம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் யாருடைய பார்மையும் நான் பார்க்கவில்லை. ஏனெனில் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருந்து வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்த போதிலும் ஆஸ்திரேலிய அணி3-வது போட்டியில் சிறப்பான பணியை செய்துள்ளது. இந்ததொடரில் பேட்டிங் கடினமாக இருந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். இது பந்துகள் சுழல்வதால் மட்டும் நிகழவில்லை, சீரற்ற பவுன்ஸும் இருக்கிறது. இதனால் ஆடுகளத்தின் மீதான நம்பிக்கயை இழந்துவிடுவீர்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்