Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேசிய தடகளப் போட்டிகளில் புதிய சாதனைகளுடன் பதக்கம் வென்ற தமிழக மாற்றுத் திறனாளி வீரர்கள் கவுரவிப்பு

மதுரை : புனேயில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் தேசிய சாதனை படைத்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 21வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மார்ச் 16 முதல் 21 ம்தேதி நடந்தது. இந்தியா முழுவதுமிருந்து சுமார் 1200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் மூலம் மாநில தடகளப் போட்டியில் தேர்வான தமிழக பாரா தடகள வீரர்கள், வீராங்கனைகள் சுமார் 80 பேர் பங்கேற்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்