Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய இளையோர் தடகள போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு: தி.மலை மாணவர் கு.யுவராஜ் சூளுரை

திருவண்ணாமலை: உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள போட்டியின் மும்முறை தாண்டுதலில் தங்கம் வெல்வதே இலக்கு என திருவண்ணாமலை மாணவர் கு.யுவராஜ் சூளுரைத்துள்ளார்.

“களத்தில் இரு, பார்வையாளராக இருக்காதே” என்பார்கள். இந்த வாக்கியத்துக்கு எடுத்துக்காட்டாக, களத்தில் புள்ளிமானாக துள்ளி குதித்து ஆசிய அளவில் சாதனை படைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார் அக்னி பூமியின் மாணவர். அவரது பெயர் ‘யுவராஜ்’. திருவண்ணாமலை அருகே பாலியப்பட்டு கிராமத்தில் வசிப்பவர். இவரது தந்தை பெயர் குமார். காய்கறி வியாபாரி. தாய் மலர், பசுமாடுகளை பராமரித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யுவராஜ், மும்முறை தாண்டுதலில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கண்ட் நகரில் ஏப்ரல் 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள 5-வது ஆசிய இளையோர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்