Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இந்திய மக்களுடன் எனக்கு ஆழமான பிணைப்பு உண்டு” - இன்ஸ்டா பதிவில் டிவில்லியர்ஸ் உருக்கம்

பெங்களூரு: கடந்த ஆண்டு தங்கள் அணியின் முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என இருவருக்கும் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரம் கொடுத்து கவுரவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் தங்களை அதில் முறைப்படி இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது ஜெர்சி எண்ணுக்கும் ஓய்வு கொடுத்துள்ளது ஆர்சிபி அணி. இந்நிலையில், உருக்கமான பதிவு ஒன்றை டிவில்லியர்ஸ் பதிவு செய்துள்ளார்.

“மார்ச் 26, 2023 அன்று நானும், கிறிஸ் கெயிலும் ஆர்சிபி அணியின் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்தோம். எங்கள் ஜெர்சி எண்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மைதானத்தின் படிக்கட்டுகளில் பல நேரங்களில் நான் எனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வுடன் கடந்து வந்துள்ளேன். ஆனால், இன்று என் மனைவி, பிள்ளைகளுடன் இதே படிக்கட்டுகளில் வரும் போது வேறுவிதமாக உணர்கிறேன். வித்தியாசமான மன நிலையில் இப்போது வருவது எனக்கே விசித்திரமாக இருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்