Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஸி.க்கு எதிரான தோல்வியை இந்திய அணி மறந்துவிடக்கூடாது: முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எச்சரிக்கை

புதுடெல்லி: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது.

270 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 248 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்துக்கு பின்னர் வர்ணனையாளராக பணியாற்றிய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியதாவது: ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31ல் தொடங்குகின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்த இந்த ஆட்டத்தை இந்திய வீரர்கள் மறந்துவிடக்கூடாது. இந்திய அணி சில நேரங்களில் இதுபோன்ற தோல்வியை மறந்துவிடும் தவறை செய்துவிடுகிறது. ஆனால் இந்த தோல்வியை மறக்கக்கூடாது. ஏனெனில் வரும் அக்டோபர்-நவம்பரில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரிடலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்