Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பஞ்சாப் கிங்ஸை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மொகாலி: நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 258 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. மேயர்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ், அரைசதம் கடந்து அசத்தினர். பதோனி, 43 ரன்கள். பூரன் 45 ரன்கள் எடுத்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்