Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'இது முழுமையான அணியே கிடையாது' - ஐபிஎல் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிருப்தி

லாகூர்: ஐ.பி.எல் காரணமாக பாகிஸ்தான் தொடரில் நியூசிலாந்து நாட்டு வீரர்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என்று முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளும் தலா 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதவிருக்கின்றன. முதல் ஒருநாள் போட்டி லாகூர் மைதானத்தில் தற்போது நடந்துவருகிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. முன்னணி வீரர்கள் பலரும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருப்பதால், அதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்