Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘குஜராத் அணியை வீழ்த்த வேண்டும் என்ற வெறி!’ - பழிதீர்த்த ஷிம்ரன் ஹெட்மையர்

ஐபிஎல் 2023 டி20 தொடரின் 23-வது போட்டி நேற்று அகமதாபாத் மொடீராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 177/7 என்ற ரன் எண்ணிக்கையை எடுக்க, தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 55 ரன்களை மட்டுமே எடுத்து திண்டாடிய நிலையில், கேப்டன் சாம்சன் (60 ரன்கள், 32 பந்துகள் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள்) மற்றும் மே.இ.தீவுகளின் அதிரடி மன்னன் ஷிம்ரன் ஹெட்மையர் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 56 ரன்களை விளாசி இறுதி வரை நின்று வெற்றி பெறச் செய்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆல்டைம் கிரேட் பினிஷிங் என்றால் இதுதான் என்று கூறும் அளவுக்கு அருமையான இன்னிங்ஸ் என்று இது வர்ணிக்கப்படுகின்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் கடந்த ஆண்டில் லீக் சுற்றிலும், இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியிலும் பிறகு இறுதிப் போட்டியிலும் தோற்கடித்தது. “ஆகவே, இது ஒரு பழிதீர்ப்பு வெற்றி” என்கிறார் ஷிம்ரன் ஹெட்மையர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்