Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இப்போது பாதுகாப்பு பிரச்சினை இல்லை; பாகிஸ்தானில் ஏன் இந்தியா விளையாடக் கூடாது?” - பிசிபி கேள்வி

ஆசியக் கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறவிருப்பதால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் நடுநிலை மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளின்போது பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களுக்கு மாற்றலாமே என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜீம் சேத்தி பரிந்துரை செய்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்திய அணி, பாகிஸ்தானில் சென்று விளையாட அனுமதி மறுக்கப்படுகிறது. கோவாவில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கவுன்சில் கூட்டம் நடைபெறுகின்றது. அதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி கலந்து கொள்ளும்போது, இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக நஜீம் சேத்தி நம்பிக்கை தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்