Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'நாளுக்கு நாள் தேறி வருகிறேன்' - டெல்லி கேபிடல்ஸ் அணியினரை சந்தித்த ரிஷப் பந்த்!

பெங்களூரு: ‘நாளுக்கு நாள் நான் தேறி வருகிறேன்’ என இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியினரை சந்தித்த பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்த போது ரிஷப் பந்த் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு மோசமான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஐபிஎல் கிரிக்கெட்டில் தான் விளையாடி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணியினரை சந்தித்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்