Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை: ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சிஎஸ்கே தொடர்ச்சியாக 3 வெற்றிகளை குவித்த நிலையில் களமிறங்குகிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. சிஎஸ்கேவின் ஹாட்ரிக் வெற்றியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்