Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி ஏன்? - சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு காரணம் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இந்த ஆட்டத்தில் பந்து வீச்சின் போது பவர்பிளேவில் சிஎஸ்கே 64 ரன்களை தாரை வார்த்திருந்தது. 14 ஓவர்கள் வரை களத்தில் இருந்த தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 பந்துகளில், 77 ரன்களை விளாசினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்