Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வல்லமை கொண்ட வீரர் சூர்யகுமார் யாதவ்' - ரிக்கி பாண்டிங்

புதுடெல்லி: உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வல்லமை கொண்ட வகையிலான வீரர் சூர்யகுமார் யாதவ். அதனால் இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான அணியில் அவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என தான் கருதுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ‘தி ஐசிசி ரிவ்யூ’ நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறி இருந்தார் சூர்யகுமார் யாதவ். அவரது ஃபார்ம் குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்தை சொல்லி வரும் நிலையில் பாண்டிங் அவருக்கு ஆதரவாகப் பேசி உள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்