Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுதீர் நாயக் காலமானார்

மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுதீர் நாயக் காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததன் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று (ஏப்ரல் 5) இரவு உயிரிழந்தார்.

இந்திய அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தொடக்க ஆட்டக்காரரான அவர் முதல் தர கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி, 4,376 ரன்கள் குவித்துள்ளார். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பிட்ச் பொறுப்பாளராக பணியாற்றியவர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்