Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வான்கடேவில் ‘பிறந்த நாள்’ வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்: கேக் வெட்டி மகிழ்ந்த சச்சின்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நாளை மறுநாள் (ஏப்ரல் 24) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது வான்கடே மைதானத்தில் மும்பை அணியினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.

வான்கடேவில் குழுமியிருந்த ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அந்த வாழ்த்து மழைக்கு நடுவே தனது பிறந்தநாளை சச்சின் கொண்டாடினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்