Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023 | பிரதான இந்திய வீரர்களின் பணிச்சுமையை கவனிக்கிறதா பிசிசிஐ?

நடப்பு ஐபிஎல் சீசனின் 70 லீக் போட்டிகளில் சரிபாதி ஆட்டங்கள் ஆடப்பட்டுள்ளது. 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்று விளையாடும் பிரதான இந்திய வீரர்களின் பணிச்சுமையை கவனிக்கிறதா பிசிசிஐ? என்பதை பார்ப்போம்.

எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆசியக் கோப்பை, இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்ததும் இந்த ஆண்டு முழுவதும் இந்திய கிரிக்கெட் அணி பிஸியாக இயங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதே நேரத்தில் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியது இந்தியா. அப்போது ‘பணிச்சுமை தான் காரணம்’ என இந்திய வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தக் கதை அப்படியே மாறி காயம் காரணமாக பிரதான வீரர்களான பும்ரா, ஜடேஜா போன்றவர்கள் விளையாடவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்