சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளைப் பெறுவது பெரும் சவாலாக மாறி இருப்பதாக ரசிகர்கள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சில போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சூழலில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சமூக வலைதள பதிவுகளையும் பார்க்க முடிகிறது. இதே சூழல்தான் சென்னை - லக்னோ இடையிலான போட்டிக்கும் இருந்தது.
0 கருத்துகள்