Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"ரசிகர்களின் அன்புக்கு நான் திருப்பி தரக்கூடிய பரிசு, இன்னொரு சீசன்"- ஓய்வு குறித்து தோனி

அகமதாபாத்: ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று அசத்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

வெற்றிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, "சொல்லப்போனால், ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். இப்போதே ஓய்வை அறிவிப்பது எளிதான விஷயம், ஆனால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பது பெரிய சவாலாக இருக்கும். அதற்கு எனது உடல் தாங்க வேண்டும். எல்லாம் உடல் ஒத்துழைப்பை பொறுத்து உள்ளது. அதை முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன. நான் பெற்ற அன்பின் அளவுக்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்" என்று பேச்சை தொடங்கினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்