Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'நிறைய பயிற்சி செய்தேன்; எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன்' - ஆகாஷ் மத்வால்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெளியேற்றி உள்ளது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் செயல்பாடு. 3.3 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். அவர் வீசிய 21 பந்துகளில் 17 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பந்துகளாக வீசி இருந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஆகாஷ் சமன் செய்துள்ளார். கடந்த 2009 சீசனில் கும்ப்ளே, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் அதை சமன் செய்துள்ளார் ஆகாஷ். கும்ப்ளேவின் எக்கானமி ரேட் 1.57. ஆகாஷின் எக்கானமி ரேட் 1.4.


கருத்துரையிடுக

0 கருத்துகள்