Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் டிக்கெட் விற்பனை முறைகேடு தொடர்பாக வழக்கு: சிக்கலில் சிஎஸ்கே?

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லி வழக்கறிஞரான அசோக் சக்கரவர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (மே 17), சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக இந்த வழக்கை அவர் தொடுத்துள்ளார். கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் அவர் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்