Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

WTC Final | ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்பாடு?

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாடாத அணிகளில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வகையில் இங்கிலாந்து புறப்பட்டு உள்ளதாக தகவல். இன்று (மே 23) அதிகாலை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் என 20 பேர் இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர்.

இதில் பயிற்சியாளர் ராகுல் திராவிட், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நெட் பவுலர்கள் ஆகாஷ் தீப், புல்கிட் நராங்க் ஆகியோரும் தற்போது இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளனர். நாளை இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் அஸ்வின் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்