Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அரயறதயல இஙகலநத வழததயத ஸபஷல: 1983 உலகக கபப வறற கறதத கபலதவ

மும்பை: 1983-ல் ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சரித்திர சாதனை படைத்து சரியாக 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அப்போது இந்திய அணியை வழிநடத்திய கேப்டனான கபில்தேவ்.

“உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பதிவு செய்த ஒவ்வொரு வெற்றியும் மகத்தானது. ஆனால், எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான போட்டி என்றால் அது இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி தான். ஏனெனில், அவர்கள் எங்களுக்கு எதிராக எளிதில் வெற்றி பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அமர்நாத் மற்றும் ஆசாத் வீசிய 24 ஓவர்கள் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த தொடர் எங்கள் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத வகையில் அமைந்தது” என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்