Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பகஸதன மறறம இலஙகயல ஆக.31 மதல சப.17 வர ஆசய கபப கரககட தடர

புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இம்முறை பாகிஸ்தான் அணி தொடரை நடத்துகிறது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இதைத் தொடர்ந்து ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்