Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அக்.15-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்?

புதுடெல்லி: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் வரும் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை ஐசிசி-யிடம் பகிர்ந்துள்ளது. இதனை ஐசிசி, தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் கருத்து கேட்பதற்காக அனுப்பி வைத்துள்ளது.

வரைவு அட்டவணைப்படி அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா தனது முதல்ஆட்டத்தில் அக். 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்