Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரஜஸதன ரயலஸ நத உதவ சயவதல கரககடடல மடடம கவனம சலததகறன: ஜயஸவல

மும்பை: தனது நிதி தேவைகளை ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி கவனித்துக் கொள்வதால் தன்னால் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான வகையில் கவனம் செலுத்த முடிவதாக இளம் கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இவர் எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எனக்கு கிரிக்கெட்தான் பிரதானம். எனது கவனம் அனைத்தும் அதில்தான் இருக்கும். எனக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆதரவு வழங்கி வருகிறது. எனது நிதி தேவைகளை பூர்த்தி செய்வதும் ராஜஸ்தான் அணிதான். அதன்மூலம் என்னால் கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்த முடிகிறது. அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். தங்கள் அணியின் வீரர்களுக்காக இதை செய்து வரும் ப்ரான்சைஸ் அணிகளுக்கு மதிப்பளிக்கிறேன்” என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்