Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் செய்தது மிகப் பெரிய தவறு: அனில் கும்ப்ளே சாடல்

அம்பதி ராயுடுவை 4-ம் நிலைக்கென்றே தயார்படுத்திய பிறகு 2019 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டு விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் பெரிய தவறிழைத்து விட்டனர் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது பயணம் நிறைவு பெறுவதாக ராயுடு பிரியாவிடை கொடுத்தார். சிஎஸ்கே ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை பரிசை அளித்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்