Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கலபநத | உலக சமபயன அரஜணடனவடன வளயடம வயபப இநதய நழவவடடத எபபட?

மும்பை: கால்பந்தாட்ட உலகின் சாம்பியனான அர்ஜெண்டினா அணியுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. இருந்தும் அந்த வாய்ப்பு நழுவிப் போயுள்ளது. அதனால் இந்தியாவில் மெஸ்ஸி மற்றும் அணியினர் களம் காணவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா. அந்த தொடரில் அர்ஜெண்டினாவுக்கு தெற்காசிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமோக ஆதரவு கொடுத்திருந்தனர். குறிப்பாக இந்திய ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில் தெற்காசிய நாடுகளில் அர்ஜெண்டினா அணி கடந்த 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட விரும்பியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்