Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக கபப கரககட அடடவண சவரஸய தகவலகள

மும்பை: இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது. இதன்படி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத்தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றிருந்தன.

மீதம் உள்ள இரு அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது. ஹைதராபாத், அகமதாபாத், தரம்சாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் லீக் சுற்று நடைபெறுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்