Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டி 20-ல் இந்திய மகளிர் அணி தோல்வி

மிர்பூர்: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

மிர்பூரில் நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28, யாஷ்டிகா பாட்டியா 12, ஷபாலி வர்மா 11 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்