Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபஎல கரககட நடபறற நரஙகளல பனடஸ ஸபரடஸ சயலகளன வரவய ர.2800 கடயக உயரவ

புதுடெல்லி: பேன்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகளுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இச்செயலிகளின் வருவாய் குறித்த விவரங்களை ரெட்சீர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் போட்டி சமயத்தில் பேன்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகளின் வருவாய் ரூ.2,800 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 24 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஐபிஎல் சமயத்தில் அச்செயலிகளின் வருவாய் ரூ.2,250 கோடியாக இருந்தது.

ஐபிஎல் சமயங்களில், ட்ரீம் 11 போன்ற பேன்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. வீரர்கள் எத்தனை ரன்கள், விக்கெட் எடுப்பார்கள் உட்பட பல்வேறு கணிப்புகளை பார்வையாளர்கள் இந்தச் செயலிகளில் பந்தயமாக முன்வைப்பார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்