Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: 7-வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறினார் பி.வி.சிந்து

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஜாங் யி மானை எதிர்த்து விளையாடினார். 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 2-21, 13-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார். இந்த சீசனில் சிந்து முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறுவது இது 7-வது முறையாகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்