Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐசிசி தொடர்களில் இனி ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகை

டர்பன்: இனி ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஐசிசி ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும் சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார். "கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம். சமமான வெகுமதி வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கிரெக் பார்க்லே குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்