Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமெரிக்க டென்னிஸ் | கோப்பை வென்றார் கர்மான் கவுர்

புதுடெல்லி: அமெரிக்காவின் இன்டியானா நகரில் உள்ள இவான்ஸ்வில்லில் மகளிருக்கான ஐடிஎஃப் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. 60 புள்ளிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி இறுதிப் போட்டியில் உக்ரைனின் யூலியா ஸ்டாரோடுட்சேவாவை எதிர்த்து விளையாடினார். இதிர் கர்மான் கவுர் தண்டி 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

ஐடிஎஃப் சுற்றுப்பயணத்தில் ஒற்றையர் பிரிவில் கர்மான் கவுர் வெல்லும் 2-வது கோப்பை இதுவாகும். இந்த வெற்றியின் மூலம், சானியா மிர்சாவுக்குப் பிறகு அமெரிக்காவில் புரோ பட்டத்தை வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை கர்மான் கவுர் தண்டி பெற்றுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்