Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் - வங்கதேச கேப்டன் நிகர் இடையே சலசலப்பு ஏன்?

மிர்பூர்: வங்கதேச அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்தும், வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானும் மோதிக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டையில் முடித்தது. இதனால் ஒருநாள் போட்டி தொடருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் ’டை’ ஆனது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்