Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பும்ரா பழைய தீவிரத்துடன் பந்து வீசுகிறார்... ராகுல், ஷ்ரேயஸ், பந்த் பேட்டிங் பயிற்சி - பிசிசிஐ அப்டேட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள புதிய மருத்துவ செய்தியின்படி, காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வலைப்பயிற்சியில் தீவிரமாக பந்து வீசி வருவதாகவும், அதேபோல் காயமடைந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த் ஆகியோரும் மறு புனரமைப்பு கால சிகிச்சையினூடாக வலையில் பேட்டிங் பயிற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

காயமடைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் பிராக்சரிலிருந்து மீண்டு வலையில் பந்து வீசி வருவதாக பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பும்ரா, பிரசித் கிருஷ்ணா இருவருமே முழு தீவிரத்துடன் பந்து வீசுவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அடுத்ததாக, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) ஏற்பாடு செய்யும் சில பயிற்சிப் போட்டிகளில் பும்ராவும், பிரசித் கிருஷ்ணாவும் பங்கேற்க உள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்