Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொலை மிரட்டல்: முன்னாள் பாக். கிரிக்கெட் வீரருக்கு 12 ஆண்டுகால சிறை தண்டனை?

கராச்சி: நெதர்லாந்து எம்பி கீர்ட் வில்டர்ஸ்-க்கு எதிராக கொலை மிரட்ட விடுத்து வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீப்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 12 ஆண்டுகாலம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

முகமது நபி குறித்த கார்டூன் போட்டியை நடத்துவதற்கான அறிவிப்பை நெதர்லாந்து எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் வெளியிட்டதை அடுத்து, அவரது இந்த அறிவிப்புக்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பாகிஸ்தானிலும் மக்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து வில்டர்ஸுக்கு கடும் கொலை மிரட்டல்களும் அவர் தலைக்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து வில்டர்ஸ் அந்தக் கார்ட்டூன் போட்டியை ரத்து செய்தார். முகம்மது நபி குறித்து கார்டூன் போட்டியை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட கீர்ட் வில்டர்சை கொல்பவர்களுக்கு 21,000 யூரோக்களை ($23,000) வழங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃப் கடந்த 2018ம் ஆண்டு வீடியோ மூலம் அறிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்