டப்ளின்: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு டப்ளின் நகரில் உள்ள மலாஹைடில் நடைபெறுகிறது.
ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் இளம் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் உள்ள மலாஹைடில் இன்று இரவு நடைபெறுகிறது. அடுத்த தலைமுறை வீரர்களாக கருதப்படும் ஐபிஎல் நட்சத்திரங்களான ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா உள்ளிட்டோருடன் இந்திய அணி நிரம்பி உள்ளது.
0 கருத்துகள்