Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முதல் தர கிரிக்கெட்டில் 244 ரன்கள் விளாசல்: பிரித்வி ஷா சாதனை!

இங்கிலாந்தில் நடைபெறும் ‘ஒன் டே கோப்பை’ கவுன்ட்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்ப்டன் ஷயர் அணிக்காக ஆடும் பிரித்வி ஷா, நேற்று 153 பந்துகளில் 244 ரன்களை விளாசி முதல் தர கிரிக்கெட் சாதனைகள் பலவற்றை முறியடித்துள்ளார். இதையடுத்து 415 ரன்கள் குவித்த நார்த்தாம்ப்டன் ஷயர் அணி பிறகு சோமர்செட் அணியை 328 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது.

நார்த்தாம்ப்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 244 ரன்கள் விளாசித்தள்ளிய பிரித்வி ஷா, அதில் 28 பவுண்டரிகள் 11 சிக்சர்களை வெளுத்து வாங்கினார். இதன் மூலம் ஒன் டே கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்த வீரர் என்ற பெருமையை எட்டியுள்ளார். மேலும், சவுரவ் கங்குலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் சிலரின் சாதனைகளையும் தூள் பறக்க விட்டுள்ளார் பிரித்வி ஷா.


கருத்துரையிடுக

0 கருத்துகள்