Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

5 ஆண்டு கால பிசிசிஐ ஊடக ஒளிபரப்பு உரிமத்தை வசப்படுத்தியது ‘வயாகாம் 18’

மும்பை: இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ‘வயாகாம் 18’ நிறுவனம் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊடக நிறுவனமான நெட்ஒர்க் 18 மற்றும் அமெரிக்காவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான வயாகாம் நிறுவனமும் (பாராமவுன்ட் நெட்ஒர்க்ஸ்) இணைந்து வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளன. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளிலும் டிஜிட்டல் ஊடகங்களிலும் ஒளிபரப்புவதற்கான 5 ஆண்டு கால உரிமத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஜெய் ஷா, வயாகாம் 18 நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்